30 நவம்பர் 2016

உதயணனின் சிங்களத்துப்புயல்

சிங்களத்துப்புயல்!

உதயணன் அவர்களின் நாவல். 
பதிப்புரை 2012 ல் தான் எழுதப்பட்டிருக்கின்றது.

தலைப்பையும் முன்னுரையையும் வைத்து சுவாரஷ்யமாக ஏதேனும் இருக்கலாம் எனும் ஆர்வத்தோடு ஆரம்பித்து இறுதியில் தொங்கலில் முடித்து வைத்தார் எனும் கோபத்தில் இனிமேல் உதயணன் நாவலே படிப்பதில்லை என முடிவும் எடுக்க வைத்த நாவல்.
சேர,சோழ, பாண்டியர்கள் சிங்கள தேசத்தினை போரில் வென்று தமிழ் ஆட்சியை நிலை நாட்டினார்கள் என மட்டும் அறிந்தோருக்கு சிங்களவரும் தமிழ நாட்டை நோக்கி படையெடுத்து வந்து அக்கால பாண்டிய இராஜ்ஜியத்தில் ஒருபகுதியை எப்படி வென்றார்கள் எனச்சொல்லும் கதை.
கி.பி 1166 ல் பாண்டியர்களுக்குள் இருந்த பிரிவினையை பயன் படுத்தி அப்பகுதியை வென்ற கதை இது. தமிழர்களை கொண்டே தமிழர்களுக்கான் புதைகுழிகள் வெட்டப்பட்டதான ஆரம்ப கால வரலாற்றின் பதிவுகளை வைத்து எழுதப்பட்ட நாவல் என எழுத்தாளர் தன் முன்னுரை யில் சொல்லி செல்கின்றார்.
சாண்டில்யனின் கன்னிமாடம், சோழ நிலா நாவல்களின் சம்பவங்களையும் இதனுடன் ஒப்பிட்டு கி.பி 1166 முதல் 1191 வரையான 25 ஆண்டுகளை சோழர், சிங்களவர், பாண்டியர் அரசியலில் புயல் விசிய காலங்களை சிங்களத்துப்புயல். கன்னிமாடம், சோழ நிலா என வரலாற்று சம்பவங்களாக வகைப்படுத்தலாம் எனவும் முன்னுரைத்து ள்ளார்.
குலசேகர பாண்டியன், வீர பாண்டியன், விக்கிரம பாண்டியன், இராதிராஜன்,பராக்கிரமபாகு, இலங்காபுரன், மழவராயன், பல்லவராயர்கள் என குறிப்பிட்ட 25 ஆண்டுகளின் நிஜமான வரலாற்றுப்பாத்திரங்களை நாவலிலும் பயன் படுத்தி இருக்கின்றார்.
ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ள ரோகண நங்கை, கடலழகி எனும் கற்பனைக் கன்னியரும் உண்டு.
சிங்கள மன்னன் பராக்கிரமபாகுவின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியும் அவர்களின் நூலான மகா வம்சத்தில் வெற்றிவாகை சூடியவன் என பாராட்டுதலுக்குள்ளானவனுமான இலங்காபுரன் சோழ மண்டலம்,ராமேஸ்வரத்தில் வந்திறங்குவதிலிருந்து ஆரம்பிக்கின்றது.
பாண்டிய நாடு அரசன் எனும் ஒருவன் கீழ் பிரிக்கப்பட்ட வள நாடுகளாக, கோட்டயங்களாக, ஊர்களான தனித்தனி நிர்வாகத்துக்கு உட்பட்டிருப்பதனால் பாண்டிய மன்னனை வீழ்த்தினாலும் அவ்வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியாது என பாண்டியர்களின் நிர்வாகம் குறித்தும், பிரிந்திருக்கும் தமிழரில் ஒருவரை கைக்குள் போட்டே காரியம் சாதிக்க நினைப்பதும், தமிழருக்கிடையேயான கட்டுக்கோப்புக்கக்ளை சிதைத்தாலன்றி  வெற்றியை தக்க வைக்கும் வாய்ப்பு கிட்டாது எனும் புரிதலுமாய்
இக்கதையும் கதைக்கான களமும் எட்டப்பர்களும் நயவஞ்சகமும், காட்டிக்கொடுப்புக்களும், நம்பிக்கைத்துரோகங்களும் நம் விரல கொண்டே நம் விரலை குருடாக்கும் வித்தையையும் சிங்களவர்கள் வழி வழியாக தம் யுத்த தர்மமாக பயன் படுத்தி சூழ்ச்சிகளால் பெற்றவைகளை தக்கவைத்துக்கொள்ள 
தமிழனை பகடையாக்கி பாண்டியனை மாது, மாது என மதியை வென்று சகடையாக்கும் அக்காலக்கதை இக்காலத்திலும் பொருந்துவது தான் மாபெரும் வேடிக்கை.

இன்றைய இலங்கை அரசியல் நிலவரத்தோடு ஒப்பிடாமல் இருக்க முடியவே இல்லை.
படிக்கலாம். 
முடிவைக்குறித்து பெரிய எதிர்பார்ப்பில்லாமல் வரலாறை அறிய படித்தும் பார்க்கலாம்,

5 கருத்துகள்:

  1. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. இந்த எழுத்தாளர் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. மிகச் சரியான
    பாசாங்கில்லா விமர்சனம்
    மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  4. ஆகா இப்படி ஒரு நூல் ?
    அறிமுகத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!